Thursday, November 11, 2010

தமிழ்ல பேசுங்க

தமிழர்களாகிய நம்மிடம் உள்ள இரண்டு குறைகள்
      1      நம் பெருமைகளை நாமே அறியாதது
      2      நாம் பெருமைகளை மட்டுமே பேசிக்கொண்டிருப்பது

முதல் குறையை பார்ப்போம் .
(முந்தைய பதிவில் இது போன்ற விஷயத்தை காட்டான் தொகுத்து இருந்தார் )
     உலக செம்மொழிகளில் சமஸ்கிருதம் ஹீப்ரு கிரேக்கம் லத்தின் சைனீஸ் ஆகிய மொழிகளுன் இணைந்த தமிழ் மொழி சைனீஸ்க்கு அடுத்தபடியாக அதிக மக்களால் பேசப்படும் மொழியாக உள்ளது.  ஆனால் தமிழர்களாகிய நாம் தமிழ்மொழிக்கு செய்யும் கைம்மாறு என்ன? "hi டா saturday evening 6  o clock meet பண்ணலாமா" இந்த வாக்கியத்தில் தமிழ் மற்றும் ஆங்கில வார்த்தைகளின் எண்ணிக்கையை நீங்களே பார்துக்கொல்லாம்.
பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்க்கும் விதமும் அப்படித்தான்
ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும்  தன் மகனை
சான்றோன் என கேட்ட தாய்
இன்று என் குழந்தைக்கு தமிழ் சரியாய் வராது என சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறாள்.  தமிழர்களாகிய நாம் ஹிந்தி பேசும் பொழுதுகூட பங்கா(fan ) பிஜிலி (Current ) என பேசுகிறோம். ஆனால் மின்விசிறி, மிதிவண்டி என பேசும் சூழல் நமக்கு இல்லை.

மற்ற எந்த மொழிக்கும் இல்லாத வளர்தன்மை தமிழ் மொழிக்கு இருக்கிறது.  உதாரணத்துக்கு கம்யுட்டர் பயண்பாட்டிற்க்க வந்தவுடன் அதற்க்கு நாம் கணினி என்று நாம் பெயர் வைத்து விட்டோம்.  ஆனால் மற்ற மொழிகளில் தமிழ் மொழி அளவிற்க்கு சாத்தியமில்லை.  கணினிகளில் பயன்படுத்தப்படும் யுனிகோட் எழுத்துகளும் தமிழ்மொழியில் சாத்தியமே. (யுனிகோட் என்றால் என்ன என்பதைப் பற்றி தனி பதிவு எழுதுகிறேன்).  சென்னை பல்கலைகழகம் மற்ற அறிவியல் சொற்களுக்கு இனையான தமிழ் சொற்களை பயன்பாட்டிற்கு  கொண்டுவறுவதற்க்கான பணியை செய்து வருகிறது.  இதை தவிற இனையத்தில் பல்வேறு தமிழ் அகராதிகளும் புழக்கத்தில் இருக்கிறது.
     உதாரணாமாக நன்பர் வெங்கட்ராமனின் சந்தேகம். ஆம்லெட்டிற்க்கு தமிழில் முட்டை ஊத்தப்பம். சரியாகவும் எளிமையானதாகவும் உள்ளதல்லவா.
சரி பெருமைகளை மட்டுமே பெசிக்கொண்டிருந்தால் எப்படி.  அடுத்து என்ன செய்ய?
     முடிந்தவரை பேச்சுவழக்கத்தில் பிற மொழிச் சொற்களை தவிர்த்து தமிழில் பேசுங்கள்
     பொது இடங்களில் நல்ல தமிழில் பேசுவதை அவமானமாகவோ தரக்குறைவாகவே நினைத்துக் கொள்ளாதீர்கள்
     பிற மொழிகளில் சாத்தியமான அனைத்தும் தமிழ் மொழியிலும் சாத்தியம் என்பது சத்தியம்
     பிழையின்றி தமிழ் பேச எழுத கற்றுக் கொள்ளுங்கள்
     நமது பிள்ளைகள் நன்பர்களை நல்ல தமிழில் எழுத பேச ஊக்கப் படுத்துங்கள்.
     வெளிமாநிலத்தில் வசிக்கும் தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கண்டிப்பாக தமிழை கற்றுக் கொடுங்கள்.
உலகில் மிகப்பெரிய கண்டுபிடிப்பாளர்கள் அணைவரும் அவர்கள் தாய் மொழியில் கல்வி கற்றவர்கள் என்ற உண்மையை உணருங்கள்.

தமிழ் வளர்க்க அல்லது அழியாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் ஆலோசனைகளை இந்த பகுதியில் எழுதுங்கள்.

பதிவாளர்
"வெண்னை வெட்டி" சிப்பாய்
(பிழைகளை சுட்டி காட்டுங்கள்
முடிந்தால் எழுத்துக்களை திருத்திக்கொள்கிறேன்
இல்லையேல் எழுதுவதை நிருத்திக்கொள்கிறேன்.)

No comments:

Post a Comment